அண்ணாமலைக்கு தான் ‘கோ பேக்’ சொல்ல வேண்டும் - கே.எஸ்.அழகிரி

 
ks alagiri

தவறான தகவல்களை கூறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தான் ’கோ பேக்’ சொல்ல வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  கர்நாடகா அரசையும்,  டி .கே சிவகுமாரையும் கண்டிக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனம் இல்லை.  மேகதாது விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில் கர்நாடகாவிற்கு முதல்வர் சென்றால் போராட்டம் நடத்துவோம் . கோ பேக் ஸ்டாலின் என்று சொல்வோம்.  காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் பாஜக எந்த அரசியலும் செய்யவில்லை என்று கூறினார்.

annamalai

இந்நிலையில், அண்ணாமலைக்கு தான் கோ பேக் சொல்ல வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல்களை கூறி இருக்கிறது. அதை மீறி எந்த அரசும் செயல்பட முடியாது. அதற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம்? இதற்காக 'கோ பேக்' என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? இதை பொது மக்கள் ஏற்பார்களா? முறையாக பார்த்தால் தவறாக சொல்லும் அண்ணாமலைதான் வெளியேற வேண்டும். அவருக்கு 'கோ பேக்' சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு கூறினார்.