ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை தேசமும் உலகமும் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறது - ஆளுநர்

 
rn ravi

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை தேசமும் உலகமும் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். 

இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தெய்வீகப் பரிசான உலகளாவிய அன்புக்காக, தேசமும் உலகமும் அவரை மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவரது தலைசிறந்த சீடரான சுவாமி விவேகானந்தர் சுயமரியாதை மற்றும் பெருமிதம் கொள்வதற்கான அழைப்பை நமக்கு விடுத்து, பாரதத்தின் புகழ்பெற்ற எதிர்காலத்துக்கான வழியைக் காட்டினார். 


இன்று பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆசியுடனும், சுவாமி விவேகானந்தரின் உத்வேகத்துடனும் நம்பிக்கை கொண்ட தேசம் #அமிர்தகாலத்தில்  #வளர்ச்சியடைந்தபாரதத்தை உருவாக்கும் உறுதியுடன் நகர்கிறது என குறிப்பிட்டுள்ளார்.