தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரென கொண்டிருந்தவர் மகாகவி பாரதியார் - அண்ணாமலை புகழாரம்
தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரென கொண்டிருந்த மகாகவி பாரதியாரின் புகழ் போற்றி வணங்குகிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த முன்னோடி, நம் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று. வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர். பன்மொழி வித்தகர். கல்வி, தமிழ் மொழி, சமூக நீதி, பெண் விடுதலை, தேசியம் என அனைத்து துறைகளிலும் தொலை நோக்குச் சிந்தனை கொண்டவர்.
தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த முன்னோடி, நம் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று.
— K.Annamalai (@annamalai_k) December 11, 2024
வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர். பன்மொழி வித்தகர். கல்வி, தமிழ் மொழி, சமூக நீதி, பெண் விடுதலை, தேசியம் என… pic.twitter.com/tHy2qTvaF5
பாரதம் உலகின் குருவாக விளங்க வேண்டும் உள்ளிட்ட தேச வளர்ச்சிக்கான பாரதியாரின் ஒவ்வொரு கனவுகளும் இன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு
நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியில் நனவாகி வருகின்றன. தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டிருந்த மகாகவி பாரதியாரின் புகழ் போற்றி வணங்குகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.


