காவலர்களின் நினைவேந்தல் தினம் - செல்வப்பெருந்தகை எம்எல்ஏ ட்வீட்

 
selvaperunthagai

நாடு முழுவதும் காவலர்களின் வீரவணக்கநாள் இன்று நினைவு தினம் இன்று அவர்களுக்கு எங்களது வீரவணக்கம் என்று எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தனது சமூகவலைத்தள பக்கத்தில், நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர்களின் வீரவணக்கநாள் இன்று (அக்டோபர்21) நினைவு தினம் இன்று அவர்களுக்கு எங்களது வீரவணக்கம்.

POLICE

காவலர்களின் நினைவேந்தல் தினத்தில், ஒவ்வொரு நொடியும் நம்மைக் காக்கும் அவர்களின் துணிச்சலுக்கும், யாருக்கும் அஞ்சாத வீரத்திற்கும், தியாகத்திற்கும் எமது வணக்கங்கள்.



காவலர்களின் தைரியம், மனிதாபிமான செயல்கள், தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகள், நெருக்கடி காலங்களில் நமது பாதுகாப்பிற்கு அவர்கள் செய்திட்ட பங்களிப்பு ஆகியவற்றிற்கு எங்களது இதயப்பூர்வமான நன்றிகள். என்று குறிப்பிட்டுள்ளார்.