மணமக்களுக்கு தக்காளி பரிசு : கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் குசும்பு..

 
மணமக்களுக்கு தக்காளி பரிசு : கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் குசும்பு..


 கோவையில் நடைபெற்ற  திருமண நிகழ்ச்சி ஒன்றில், விஜய் மக்கள் இயக்கத்தினர்  மணமக்களுக்கு  தக்காளி பரிசாக வழங்கியது ஆச்சரியத்தை  ஏற்படுத்தியுள்ளது.  

தென்னிந்திய உணவு வகைகளில் சாம்பார், ரசம்,. கூட்டு, பொறியல், தக்காளி சாதம், காரக்குழம்பு என எந்த  உணவு சமைத்தாலும் அதில் தக்காளி அவசியமாகிறது. தக்காளி இல்லையென்றால் சமையலே இல்லை என்கிற அளவிற்கு  அதன் தேவை மிக அதிகம்..  இந்த நிலையில்  கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை வின்னை  முட்டும் அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு  ஆண்டும் வெங்காயம் விலை உயர்வது வழக்கம்... ஆனால் இந்த ஆண்டு மாறாக  தக்காளி விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.  3 மாதங்களுக்கு முன்னர் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, தற்போது  சில்லறை விற்பனையில் கிலோ  ரூ. 100  முதல் ரூ. 120  வரை எட்டியிருக்கிறது.  

மணமக்களுக்கு தக்காளி பரிசு : கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் குசும்பு..

 இந்த விலை உயர்வால் மக்கள் திணறி வருகின்றனர். இந்தச்சூழலில்  கோவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில்  மணமக்களுக்கு தக்காளி பரிசலிக்கப்பட்ட சம்பவம்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு பேசுபொருளாகியிருக்கிறது.  எப்போதும் இந்த குசும்பு வேலைகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஈடுபடுவது வழக்கம் .. ஏற்கனவே  வெங்காயம் விலை ஏற்றத்தின்போதும் இதேபோல் திருமண நிகழ்ச்சிகளில் மணமக்களுக்கு வெங்காயம் பரிசளிக்கப்பட்டது. 

மணமக்களுக்கு தக்காளி பரிசு : கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் குசும்பு..

அந்தவகையில்,  கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணி பொருளாளரான அக்கீம்,  என்பவரின் மகள்  திருமணத்தில் தக்காளி பரிசளிக்கப்பட்டிருக்கிறது. கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள், மணமக்கள்  அப்சானாவிற்கும், ஹாரீஸ் என்பவருக்கும்   திருமண பரிசாக மணமக்களுக்கு தக்காளியை வழங்கி ஆச்சரியப்படுத்தினர்.  இந்த  வீடியோ  மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.