நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்டிகையை ஒட்டி நாளை (7ம் தேதி) மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுக இன மக்கள் ஹெத்தையம்மனை குல தெய்வமாகா வழிபட்டு வரும் நிலையில் ஆண்டுதோறும் கோத்தகிரி அருகே பேரகணியில் உள்ள ஹெத்தை அம்மன் கோவிலில் பண்டிகை விமர்சியாக நடத்தபடும். அப்போது மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் அங்கு சென்று ஹெத்தை அம்மனை வழிபாட்டு வருவதால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடபடுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான பண்டிகை பல்வேறு கிராமங்களில் திங்கட் கிழமை தொடங்கி உள்ள நிலையில் பேரகணி ஹெத்தை அம்மன் கோவிலில் நாளை திருவிழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடபட்டுள்ளது.
பேரகணியில் ஹெத்தை பண்டிகை வரும் 12-ந்தேதி வரை நடைபெற உள்ள நிலையில் ஜகதளா, பெத்தளா, கூக்கல், ஒன்னதளா, சின்ன குன்னூர், எப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஹெத்தையம்மன் பண்டிகை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 24-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயலபடும் என மாவட்ட ஆட்சிதலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.


