சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை

 
assembly

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும்  தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும்  பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் சென்னை விமான நிலையத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

rain

இந்த நிலையில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்கனவே இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.