இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. தங்கம் விலை மீண்டும் சரிவு..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ.39,424 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை ஒரு நாள் உயர்வதும், ஒரு குறைவதுமாக தாறுமாறன ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. 14-ந்தேதி தமிழ்புத்தாண்டு நாளன்று தங்கம் விலை 40 ஆயிரத்தை தாண்டி இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை எற்படுத்தியது. அன்றைய தினம் ஒரு பவுன் ரூ.40,096-க்கு விற்பனையானது. அதன்பிறகு தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வந்த தங்கம் விலை கடந்த 20 ஆம் தேதி சவரனுக்கு அதிரடியாக 544 ரூபாய் குறைந்தது. அன்றைய தினம் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 40 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்து ஒரு சவரன் ரூ.39,656க்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னர் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 136 ரூபாய் குறைந்திருக்கிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் 4,926 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 39,424 விற்கப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று முன்தினம் ஒரு கிராம் 4,945 ரூபாய்க்கும் , ஒரு சவரன் 39,560 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இன்று சென்னையில் வெள்ளி விலையும் குறைந்திருக்கிறது. கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ. 71.60 காசுகளுக்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 70.80 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி 70, 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.