விம்கோ நகர் - சுங்கச்சாவடி நிலையங்கள் இடையே 20 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கம்!!

 
metro

சென்னை மெட்ரோ ரயில் நீல வழித்தடத்தில் விம்கோ நகர் - சுங்கச்சாவடி நிலையங்கள் இடையே ஒருவழிப்பாதையில் மட்டும் 20 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் இன்று காலை 11.20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ இரயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ இரயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.

metro

நீலவழித்தடத்தில் சுங்கச்சாவடி மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து ஏ.ஜி- டி.எம்.எஸ்., நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம் போல் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை தொழில் நுட்ப வல்லுனர்கள் சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுப்பட்டுள்ளனர். 

metro

தொழில்நுட்ப கோளாறு வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ இரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் மெட்ரோ இரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துகிறது.