கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

 
RN

மறைந்த முன்னாள் கலைஞர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை  செலுத்தினார்.

rnt

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  தமிழக முதல்வரும்,  திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று அமைதி பேரணியில் ஈடுபட்டனர். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 முதலமைச்சர் ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து பேரணி  தொடங்கிய நிலையில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ. வேலு,  உதயநிதி ஸ்டாலின் , மஸ்தான் ,தங்கம் தென்னரசு , சேகர்பாபு உள்ளிட்ட பங்கேற்றனர்.  அத்துடன் மக்களவை உறுப்பினர்களான டி.ஆர். பாலு ,தயாநிதிமாறன், கனிமொழி உள்ளிட்ட திமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக மூத்த நிர்வாகிகளும் ,தொண்டர்களும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

mk stalin

இதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் பேரணி முடிவடைந்த நிலையில்,  முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.