முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி - நாளை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்

 
tn

சென்னையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.  தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. 

சென்னையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 6 கோரிக்கைகளில் முக்கியமான ஒரு கோரிக்கையையாவது உடனடியாக நிறைவேற்றுமாறு கேட்டும் அரசு ஏற்கவில்லை. இன்று மாலை வரை நேரம் உள்ளது. அமைச்சர் மீண்டும் அழைத்தால் பேசத் தயாராக இருக்கிறோம் என தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.