இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் - டிடிவி தினகரன் வாழ்த்து!!

 
ttv

 ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ttv

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனித குலத்திற்கு நற்போதனைகளை அளித்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  பகையாலும், துரோகத்தாலும் சிலுவை சுமந்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்த திருநாள், எல்லாருக்கும் புதுவாழ்வைத் தந்திடும் நன்னாளாக அமையட்டும்; மனிதகுலத்தைச் சூழ்ந்த துன்பங்கள் அனைத்தும் விலகட்டும்.

ttv dhinakaran

அன்புதான் உலகின் பெரும்சக்தி என்பதைப் போதித்த யேசுநாதரின் போதனைகளை என்றும் நம் நெஞ்சில் நிறுத்தி செயல்படுவோம். ஈஸ்டர் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்க்கட்டும்; அந்த மகிழ்ச்சி எந்நாளும் நிலைக்கட்டும் என வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.