ஆகஸ்ட் 6ஆம் தேதி அமமுக பொதுக்குழு கூட்டம் - டிடிவி தினகரன் அறிவிப்பு!
வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இது தொடரபாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம், கழக துணைத்தலைவர் திரு.S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகிற 06.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.30 மணிக்கு சென்னை, வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்(@ammkofficial) பொதுக்குழு கூட்டம் :
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 30, 2023
வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னை, வானகரத்தில் நடைபெறுகிறது. pic.twitter.com/I7tkAbSbKk
அனைத்து கழக பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.