அனைவருக்கும் எனது கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை கார்த்திகை தீப திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. காத்திகை தீப திருநாளை முன்னிட்டு தலைவர்கள் பலரும் தமிழகத்தில் உள்ள இந்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இருள் நீங்கி ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் மக்கள் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பரவ அனைவருக்கும் எனது கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 25, 2023
மங்களகரமான இந்நாளில் ஏற்றப்படும் தீபத்தில் பிறக்கும் ஒளி, மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி,… pic.twitter.com/w79fkjqkgG
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இருள் நீங்கி ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் மக்கள் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பரவ அனைவருக்கும் எனது கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மங்களகரமான இந்நாளில் ஏற்றப்படும் தீபத்தில் பிறக்கும் ஒளி, மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் தரக்கூடியதாக அமையட்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.