சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்த மகாகவி பாரதியாரை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்

 
TTV TTV

சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்த மகாகவி பாரதியார் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்ரனர். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 


தேசத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் விடுதலை போராட்ட வீரராக, பெண்களின் உரிமைகளை மீட்டெடுத்த போராளியாக, சமூகத்தை மேம்படுத்தும் கவிதைகளை படைத்த சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்த மகாகவி பாரதியார் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.