எளிமையின் சிகரம், சரித்திர நாயகர் எம்.ஜி.ஆரின் வழியில் பயணிப்போம் - டிடிவி தினகரன்
எளிமையின் சிகரம், சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழுக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது வழியில் எந்நாளும் பயணிப்போம் என
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், பேரறிஞர் அண்ணாவின் குணநலன்களை குவியப் பெற்றிருக்கும் மாபெரும் தலைவர், ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், அடிமட்ட தொண்டனையும் சமமாக பாவிக்கும் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவுதினம் இன்று.
பேரறிஞர் அண்ணாவின் குணநலன்களை குவியப் பெற்றிருக்கும் மாபெரும் தலைவர், ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், அடிமட்ட தொண்டனையும் சமமாக பாவிக்கும் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவுதினம் இன்று.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 24, 2023
மக்களின் இதயங்களை கோயிலாக்கி அங்கே நிரந்தரமாக… pic.twitter.com/E3aFGT2FUx
மக்களின் இதயங்களை கோயிலாக்கி அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் எளிமையின் சிகரம், சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழுக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது வழியில் எந்நாளும் பயணிப்போம் என இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.