தூத்துக்குடி: புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை தொடக்கம்!!

 
tn

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

train

வரலாறு காணாத கன மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக தூத்துக்குடியில் இருந்து எந்த ரயில்களும் இயக்கப்படவில்லை. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடிந்ததை தொடர்ந்து 5 நாட்களுக்குப் பிறகு சென்னையிலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்று வந்தடைந்தது. 

bus

இந்நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடங்கியுள்ளது. கனமழையால் 4 நாட்களாக பேருந்து நிலையத்தில் வெள்ளநீர் தேங்கி இருந்த நிலையில், வெள்ள நீர் வடிந்ததையடுத்து போக்குவரத்து சேவை தொடங்கியது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், கோவில்பட்டி, சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.