உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை ஓட்டுக்காக வண்டி வண்டியாக கொட்டுவார்கள் - விஜய்

 
Vijay Vijay

உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை அடுத்த ஆண்டு தேர்தலின்போது வண்டி வண்டியாக கொட்டுவார்கள் என விஜய் கூறியுள்ளார்.





 

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களை தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். மூன்று கட்டமாக நடைபெறவுள்ள இந்த கல்வி விருது விழாவில், இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்று உள்ளனர்.

கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியாவது; தேர்தலின்போது யாரும் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம்.  உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை அடுத்த ஆண்டு தேர்தலின்போது வண்டி வண்டியாக கொட்டுவார்கள். ஓட்டுக்கு பணத்தை கொட்டும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்றும் எனக்கு தெரியும். ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்பது பெரிய விஷயமல்ல, சாதாரண விஷயம்தான். நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள் என கூறினார்.