சென்னை ஐஐடியில் 2 மாணவர்கள் தற்கொலை முயற்சி - ஒருவர் உயிரிழப்பு

 
iit

சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த இரண்டு மாணவர்கள் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முன்ற நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னை ஐஐடி எனப்படும், இந்திய தொழில்நுட்ப கழகத்தில், மகாராஷ்டிராவை சேர்ந்த மாணவர் ஸ்ரீவன் சன்னி என்பவர் 2ம் ஆண்டு முதுநிலை ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், சன்னி விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சன்னி வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் அந்த அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சன்னி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு, சடலமாக தொங்கியது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சன்னி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சன்னியுடன் சேர்ந்த மற்றொரு மாணவர் மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.