விவசாய பணியில் ஆத்தூர் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் மின்னல் தாக்கி பலி!

 
dead body

ஆத்தூர் அருகே மின்னல் தாக்கி விவசாய பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இயல்பை விட அதிகமாக மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் இடி, மின்னல் தாக்கியும் வெள்ளப் பெருக்கில் சிக்கியும் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. அந்த வகையில், ஆத்தூர் அருகேயும் மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

dead

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி தாலுக்கா புதூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்பவரது மனைவி ஜெயக்கொடி. இவரும் அதே பகுதியை சேர்ந்த அலமேலு என்ற பெண்ணும் ஜெயக்கொடியின் உரமிட்டு கொண்டிருந்தனர். திடீரென கனமழை பெய்ததால் மழையில் நனையாமல் இருக்க விவசாய நிலத்தின் அருகில் இருக்கும் புளிய மரத்தடியில் இருவரும் ஒதுங்கியுள்ளனர். அப்போது, புளிய மரத்தின் மீது மின்னல் தாக்கி ஜெயக்கொடி மற்றும் அலமேலு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.