கோடநாடு வழக்கில் ஈபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச உதயநிதிக்கு தடை!!

 
gn

கோடநாடு வழக்கில் ஈபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச உதயநிதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Kodanaduஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோடநாடு கொலை வழக்கு குறித்து பேசும்போது எடப்பாடி பழனிசாமியின் பெயரை பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்குகளில் , ஊழல் வழக்குகளிலும் இருந்தும் தப்பிக்க நீங்கள் ஆட்டுதாடிக்கு பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒரு நாள் காணாமல் போகும்போது நீங்கள் என்ன ஆகப் போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எடப்பாடி அவர்களே என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும்,  அவதூறு பரப்பும் வகையிலும் அமைச்சர் உதயநிதி பேசி வருகிறார். தன்னை பற்றி பேச அமைச்சர்  உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும்.  ஒரு  கோடியே  10 லட்சம் ரூபாய் மானம் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

udhayanidhi stalin

இந்நிலையில் கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.