அண்ணன் போல என்னிடம் பாசமாக இருப்பார் - மயில்சாமி மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின்..

 
udhayanidhi stalin

‘ரசிகர்களின் அன்பைப்பெற்ற அண்ணன் மயில்சாமி என்றென்றும் நினைவுக் கூறப்படுவார்’என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “அண்ணன் மயில்சாமி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர். ரசிகர்களின் அன்பைப்பெற்ற அண்ணன் அவர்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.”குறிப்பிட்டுள்ளார்.  

அண்ணன் போல என்னிடம் பாசமாக இருப்பார் - மயில்சாமி மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின்..

அதேபோல் சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, “நெஞ்சுக்கு நீதி படப்பிடிப்பின் போது  கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேல் எண்ணுடனேயே இருந்தார். ஒரு அண்ணன் போல இருந்தார். அதுமட்டுமின்றி 10 நாட்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார். நல்ல நடிகர் என்பதைத் தாண்டி நல்ல மனிதர். அண்ணன் மயில்சாமி மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கிறது. குடும்பத்தில் ஒருவர் போல பேசுவார்; பாசமாக பழகுவார். என்னிடம் மிக பாசமாக இருப்பார்.  

எப்போதும் பொதுமக்களுக்கு தேவையானது குறித்து என்னிடம் பேசுவார். அவருக்கோ அவரது குடும்பத்திற்கோ தேவை என்று எதுவும் கேட்க மாட்டார். எப்போதும் அவர்களுக்கு அது செய்ய வேண்டும், இந்தக் கோயிலுக்கு இதை செய்ய வேண்டும் என பொதுமக்கள் குறித்தே பேசுவார்.” என்று தெரிவித்தார்.