முதல்வர் ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் ....ராகுல் காந்தி வெளியிடுகிறார்!!

 
tn

முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள 'உங்களில் ஒருவன்' நூலின் முதல் பாகத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னையில் வெளியிடுகிறார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,   உங்களில் ஒருவன் என்ற பெயரில் தனது வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியுள்ளார். இதன் முதல் பாகம் இன்று வெளியாகிறது.

tn

23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகள், இளமைக்காலம், பள்ளிப்படிப்பு, கல்லூரி காலம், அரசியல் ஆர்வம், முதலில் நடத்திய கூட்டம், பேச்சு, திரைஉலகம், திருமணம் ,விசா காலம் உள்ளிட்ட பல முக்கிய வாழ்க்கை கட்டங்களை தொகுத்து இந்தப் புத்தகத்தில் அவர் பதிவு செய்துள்ளார். அதாவது கடந்த 1976 வரை நடந்த நிகழ்வுகளை அவர் புத்தகத்தில் எழுதியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் உங்களில் ஒருவன் முதல் பாகம் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு திமுக பொதுச் செயலாளரும் ,அமைச்சருமான துரைமுருகன் தலைமை ஏற்கிறார். திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்க , எம்.பி. கனிமொழி வரவேற்புரையாற்றுகிறார்.

tn

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு நூலை வெளியிடுகிறார். கேரள முதல்வர் பினராயி  விஜயன்,  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா,  பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து , நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு வாழ்த்துரை தெரிவிக்கின்றனர். இதையடுத்து விழாவில் விழாவின் இறுதியில் முதல்வர் முக ஸ்டாலின் ஏற்புரை ஆற்றுகிறார்.

உங்களில் ஒருவன்  புத்தக வெளியீட்டு விழாவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி , கூட்டணி கட்சி தலைவர்கள்,  நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்ய  தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.