'இதை செய்தால்' பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாமே...ராமதாஸ் சொல்லும் அட்வைஸ்!

 
PMK

பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க மத்திய அரசு குறைக்க  வேண்டும்  என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

petrol

சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து எண்ணெய் விலையை,   இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்து வருகின்றன.  அந்த வகையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 8 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில்   சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 75 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.106.69 ஆகவும்,ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76 ஆகவும்  விற்பனையாகி வருகிறது.


இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் விலை 76 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. கடந்த 9 நாட்களில் 8 தவணைகளில் பெட்ரோல் விலை ரூ.5.29, டீசல் விலை ரூ.5.33 உயர்த்தப்பட்டிருக்கிறது! பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அவற்றின் இரு சக்கர ஊர்திகளின் எரிபொருளுக்காக மட்டும் மாதம் ரூ.5 ஆயிரத்திற்கும் கூடுதலாக செலவிட வேண்டியிருக்கிறது.


ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.106.69, டீசல் விலை ரூ.96.76 என்பது நினைத்துப் பார்க்க முடியாத விலை ஆகும்! ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது நியாயமல்ல. இதனால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், இனியும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதை தவிர்க்க உற்பத்தி வரிக் குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க மத்திய அரசு குறைக்க  வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.