கலைஞர் 5ம் ஆண்டு நினைவு நாள் - டெல்லி அண்ணா அறிவாலயத்தில் மரியாதை

 
tn

டெல்லி அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதி சிலைக்கு வைகோ மரியாதை செலுத்தினார். 

tn
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  தமிழகம் முழுவதும் கலைஞரின் நினைவுதினத்தையொட்டி திமுகவினர் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தமிழக முதல்வரும்,  திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று அமைதி பேரணியில் ஈடுபட்டனர். அத்துடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதுடன்,  சென்னை, சி.ஐ.டி. நகர் கனிமொழி எம்.பி ., இல்லத்திற்கு சென்று திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்

tn

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, டெல்லி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., திருச்சி சிவா எம்.பி., சண்முகம் எம்.பி., கணேமூர்த்தி எம்.பி. உள்ளிட்டோர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.