மிக்ஜாம் புயல் - ரூ. 10 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார் வைகோ

 
tn

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

rain

கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதனிடையே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் தாராளமாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 



இந்நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் மற்றும் கட்சி நிதியும் சேர்த்து மொத்தம் 10 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.