'பால்பாண்டியாக வந்தான் பாரதிராஜா..." - பாட்டு பாடிய வைரமுத்து ; நெகிழ்ந்த இயக்குநர் இமயம்!!
இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நல குறைவால் ஓய்வு பெற்று வருகிறார். அவரை அண்மையில் கவிஞர் வைரமுத்து சந்தித்துள்ளார். அத்துடன் பால்பாண்டியாக வந்தான் பாரதிராஜா என்ற பாடல் வரிகளை தென்மேற்கு சீமையிலே தேரோடும் வீதியிலே பாட்டு மெட்டுடன் கலந்து வைரமுத்து பாரதிராஜாவுக்கு பாடி காட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பால்பாண்டியாக வந்தான் பாரதிராஜா என்ற வைரமுத்துவின் பாடலை கேட்டு நெகிழ்ந்து போன பாரதிராஜா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாக உள்ள மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
எழுந்து வா இமயமே!@offBharathiraja | #பாரதிராஜா pic.twitter.com/AqqZjN0DTA
— வைரமுத்து (@Vairamuthu) August 1, 2023
எழுந்து வா இமயமே!@offBharathiraja | #பாரதிராஜா pic.twitter.com/AqqZjN0DTA
— வைரமுத்து (@Vairamuthu) August 1, 2023
இப்படத்தில் பாரதிராஜா நடிக்கும் நிலையில் இப்படத்தை சுசீந்திரன் தயாரிக்கிறார். 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா மற்றும் இளையராஜா கூட்டணி இணைந்து பணிபுரிவது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.