பாஜக பிரமுகர் குஷ்பூ மீது விசிகவினர் புகார்!!

 
khushbu-34-4

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து அவருடன் லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் அநாகரிகமான கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தேசிய மகளிர் ஆணையமும் தனது எதிர்ப்பை தெரிவித்தன. இந்த சூழலில் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இணையவாசி ஒருவர் குஷ்பூவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த குஷ்பூ. "திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

khushbu

ஒரு பெண்ணை அவமதிக்கவும். மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். நடிகை குஷ்புவின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக குஷ்பூ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ,  சேரி என்றால் பிரஞ்சு மொழியின் அன்பு என்று அர்த்தம். என்னை விமர்சித்தவர்களை நான் அன்பால் பேச முடியாது என நகைச்சுவையாக கூறி இருந்தேன். இந்த கருத்தை ஒருசில தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர் என்று  விளக்கம் அளித்துள்ளார்.

Khushbu

இந்நிலையில் நடிகை குஷ்பு மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலித் மக்கள் பேசும் மொழியை வன்மம் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுப்படுத்தி பேசியதால், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக நிர்வாகி கார்த்திக் புகார் அளித்துள்ளார்.