அமித் ஷாவை கண்டித்து ஆம்பூரில் விசிக-வினர் ரயில் மறியல்!
அம்பேத்கர் குறித்தான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து, ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில்’ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள். அதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொன்னால் கூட சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அம்பேத்கர் குறித்தான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து, ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற போலீசார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் ரயில் மறியல் போராட்டம் காரணமாக பெங்களூரு - சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது.


