"பெண்களுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1 லட்சம்" - காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு திருமாவளவன் வரவேற்பு!

 
Thiruma

சமூகநீதியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்று திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

tn

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போது, சமூகநீதியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. இந்த தேர்தலின் நாயகன் தேர்தல் அறிக்கை தான் என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது...ஒன்றிய அரசுப்பணியில் பெண்கள் இட ஒதுக்கீடு ஒரு புரட்சிகரமான திட்டம். இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை உயர்த்துவது விளிம்பு நிலை மக்களின் வாழ்வை உயர்த்தும் நல்ல திட்டம்.



நீட் தேர்வில் மாநில அரசின் முடிவிற்கே விடுவது நம்பிக்கையளிக்கிறது. பொதுப் பட்டியலில் உள்ளவற்றை மாநில பட்டியலுக்கு மாற்றுவது மாநில மக்களின் உணர்வுகளை மதிப்பதாக உள்ளது. சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை மீண்டும் வழங்குவது நல்லது. இத்தேர்தல் அறிக்கை இந்தியாக் கூட்டணிக்கு வலுச்சேர்க்கும் என்றார்.