வீரதீர சூரன் திரைப்படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி

 
c

நடிகர் விக்ரமின் வீரதீர சூரன் படத்தை வெளியிடுவதற்கு தடை இல்லை  என டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

court

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான 2 பாடல்கள், டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படும் முன்பே ரிலீஸ் தேதியை வெளியிட்டதால், தயாரிப்பு நிறுவனம் மீது B4U நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. படத்திற்கு நிதி வழங்கியதால் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியை பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டம் என B4U குற்றம் சாட்டியிருந்தது. இதையடுத்து படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. 
 
அப்போது வீர தீர சூரன் படத்தை தயாரித்த ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இருதப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு செட்டில்மெண்ட் முடிவிற்கு வந்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்ததை அடுத்து, நடிகர் விக்ரமின் வீரதீர சூரன் படத்தை வெளியிடுவதற்கு தடை இல்லை  என டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.5 கோடி ரூபாயை ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. அதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை இன்று மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.