வீரபாண்டிய கட்டபொம்மன் நாட்டுக்காக அவர் செய்த தியாகங்கள் அளப்பரியது!

 
ops

குறுகிய காலமே வாழ்ந்து மறைந்தாலும், நாட்டுக்காக அவர் செய்த தியாகங்கள் அளப்பரியது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Ops

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய விடுதலைப் போரில் தன் வாழ்வைத் துச்சமென மதித்து அன்னை பாரதத்தின் அடிமைத் தளையைத் தகர்த்தெறிய பாடுபட்டு, வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் வீண்போகாமல் காலந்தோறும் பிறை மதியென வளர்ந்து விடுதலை பெற உதவியதை நினைத்து அந்தப் பெருமைமிக்க அடிச்சுவட்டில் நாம் அனைவரும் நாட்டுப் பற்றுடன் வாழ்வோம் என்று அவர் நினைவு நாளான இன்று உறுதி ஏற்போம். 


குறுகிய காலமே வாழ்ந்து மறைந்தாலும், நாட்டுக்காக அவர் செய்த தியாகங்கள் அளப்பரியது.என்று குறிப்பிட்டுள்ளார்.