பேரணாம்பட்டியில் இன்று 2வது முறையாக மீண்டும் லேசான நில அதிர்வு - சாலையில் திரண்ட மக்கள்!!

 
ttn

பேரணாம்பட்டு அருகே தரைக்காடு பகுதியில் இன்று 2வது முறையாக மீண்டும் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு,  தரைக்காடு ஆகிய  இடங்களில்,  காலை 9.30  மணி அளவில்  இரண்டு முறை சுமார் மூன்று வினாடிகள் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி வாசிகள் பீதியில் உறைந்தனர். 

earth

பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த சில தினங்களில் மட்டும் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 23 ஆகிய தேதிகளில் வேலூரில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் 3ஆவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டது அப்பகுதி வாசிகள் மத்தியில் ஒருவிதமான அச்ச உணர்வை ஏற்படுத்தியது எனலாம்.



இந்த சூழலில் பேரணாம்பட்டில் காலையில்  3-வது முறையாக  நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் பேரணாம்பட்டு அருகே தரைக்காடு பகுதியில் இன்று  ஒரேநாளில்  2வது முறையாக மீண்டும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் பேரணாம்பட்டில் நான்காவது முறையாக பகல் 1.50 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.  பெரிய பாதிப்புகள் ஏற்படும் முன்பே அடிக்கடி உணரப்படும் நில அதிர்வுக்கான காரணம் என்ன என்பது குறித்து  புவியியல் நிபுணர்களை வைத்து ஆய்வு செய்ய வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.