வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியும்!!

 
tn

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

tn

மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
சட்லஜ் நதியில் விழுந்த காரில் இருந்து காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 3ஆவது நாளாக தொடர்கிறது. பனிப்பொழிவு காரணமாக தேடும் பணியில் சிக்கல் நிலவுகிறது. சட்லஜ் நதியில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.  வெற்றி துரைசாமியை  கண்டுபிடிக்க  இந்திய கடற்படை களமிறங்கியுள்ளது.

vetri

இந்நிலையில் ஹிமாச்சலில் கார் விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியவரும். சட்லஜ் நதி அருகே கண்டறியப்பட்ட மூளை திசுக்களில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டிருந்தன; மூளை திசுக்கள், ரத்த மாதிரி எடுக்கப்பட்ட நிலையில் பெற்றோர்களின் டிஎன்ஏவுடன் ஒப்பிடப்படுகிறது.