பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!!

 
selva perunthagai

விருதுநகர் மாவட்டம் ராமுத்தேவன்பட்டியில் வின்னர் என்ற பட்டாசு ஆலையில்  பயங்கர வெடி விபத்து 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள ராமுதேவன்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தார்கள் என்றும் 10 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். பட்டாசு ஆலைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாமல் இருப்பதே இதுபோன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

fire

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பட்டாசு ஆலைகளிலும் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யப்படவேண்டும். பட்டாசு தொழில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வித்து மற்றும் பணிபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

selvaperunthagai

காயம் அடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சையளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் தாயுள்ளம் கொண்ட நமது மாண்புமிகு  @CMOTamilnadu  திரு @mkstalin  அவர்கள் உரிய இழப்பீடுகள் அறிவிப்பார்கள் என்றும் நம்புகிறேன். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.