இந்தியா மொத்தமும் வஉசி தியாகத்தையும், பெரும்புலமையையும் அறியச் செய்வோம்!

 
tn

இந்தியா மொத்தமும் வ.உ.சிதம்பரனாரின்  தியாகத்தையும், பெரும்புலமையையும் அறியச் செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆங்கிலேயருக்குச் சவால் விடும் வகையில் கப்பல் விட்டதும், விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறையில் செக்கிழுத்ததும் வ.உ.சிதம்பரனாரின் உணர்ச்சிமிகு வரலாறு!

tn

இந்த இணையற்ற தியாகங்களோடு - வழக்கறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உரையாசிரியராகவும் இருந்தவர் அவர். தொழிற்சங்க முன்னோடியாக விளங்கியவர். தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த தமிழறிஞர்.

அத்தகைய பேராளுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில்தான் நமது #திராவிட_மாடல் ஆட்சியில் 'வ.உ.சி. பன்னூல் திரட்டு', 'வ.உ.சி. திருக்குறள் உரை' உள்ளிட்ட நூல்களை அவரது 150-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி வெளியிட்டோம்!


தொடர்ந்து மேலும் பல முயற்சிகளின் வழியே இந்தியா மொத்தமும் அவர் தியாகத்தையும், பெரும்புலமையையும் அறியச் செய்வோம்! " என்று குறிப்பிட்டுள்ளார்.