மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள் - இயக்குநர் த.செ.ஞானவேல்
மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இயக்குநர் த.செ.ஞானவேல் தனது சமூகவலைத்தள பக்கத்தில்,
வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற
பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை.
இந்தியா கூட்டணி கட்சிகளின்
வாக்குறுதிகள் சமூக
நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன. |
மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை
மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம்.
வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை. pic.twitter.com/XlJHMZOqiI
— Gnanavel (@tjgnan) April 17, 2024
வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை. pic.twitter.com/XlJHMZOqiI
— Gnanavel (@tjgnan) April 17, 2024
அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா
கூட்டணி கட்சிகளின்
வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த
அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.