"வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்" - கவிஞர் வைரமுத்து

 
vairamuthu vairamuthu

மக்களவை தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

election

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை  நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

விரலில் வைத்த கருப்புமை
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்

பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்

சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்
 

என்று பதிவிட்டுள்ளார்.