தி.நகர் வாக்குச்சாவடியில் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்..!

 
1

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதல் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருக்கின்றனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் கியோயூர் வாக்குச்சாவடியில் 2 இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. திருப்பூர் வாக்குச்சாவடி மையம் 222ல் இயந்திர கோளாறு காரணமாக 30 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமானது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். நெல்லை தச்சநல்லூர், புதுக்கோட்டை, திருச்சி மேற்கு ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. பிரச்னையை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  சென்னை நெற்குன்றத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு  இன்று (ஏப்ரல் 19)  வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனே அவை சரி செய்யப்பட்டன.

தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.மதுரை உசிலம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

நெல்லை தச்சநல்லூர், புதுக்கோட்டை, திருச்சி மேற்கிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதுதவிர தஞ்சை,பெரம்பலூர் உள்ளிட்ட தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சில வாக்குச்சாவடிகளிலும் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது.

இந்நிலையில் அவை சரி செய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.