சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் நினைவு நாளில் சமூகநீதியைக் காக்க உறுதியேற்போம்! - ராமதாஸ்

 
PMK

சமூகநீதிக்காவலர் வி.பி.சிங்  நினைவு நாளில் சமூகநீதியைக் காக்க உறுதியேற்போம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

tn

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் 15-ஆம் ஆண்டு  நினைவு நாளில் சமூகநீதியைக் காக்க உறுதியேற்போம்!


மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தி, இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு  சமூகநீதி வழங்கிய தலைவர் வி.பி.சிங் அவர்களுக்கு இன்று 15-ஆம் நினைவு நாள்.  சாதிவாரி கணக்கெடுப்பு, சமூகநீதி விரிவாக்கம் ஆகியவை வி.பி.சிங் அவர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கி,  அனைத்து சாதிகளுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு  என்ற சமூகநீதி இலக்கை எட்டி, பாதுகாக்க  வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் உறுதியேற்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.