"திருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
stalin

எந்த துறையாக இருந்தாலும் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

stalin
கோவை கொடிசியாவில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவில் காணொலி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்குறளைப் போல் நெறிப்படுத்தி அதிகாரத்தை செயல்படுத்தி வருகிறோம். இந்தியா வியந்து பார்க்கும் வளர்ச்சியை தமிழ்நாடு பெறும்; மக்கள் அளித்த அதிகாரத்தை வானளாவியதாக நினைப்பதில்லை. இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10லட்சம் வீதம் ரூ.10கோடி வரை ஆதார நிதி வழங்கியுள்ளோம் .அனைவரையும் உள்ளடக்கிய நிலையில் வளர்ச்சியை நோக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார்.

MK Stalin

தொடர்ந்து பேசிய அவர்,  சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி முக்கியமானது. 450 அரங்குகளுடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 2,300 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்காக அதிகரித்துள்ளன.  சமூக நீதியுடன் சமச்சீர் தொழில் வளர்ச்சி என்பதே அரசின் நோக்கம். பல்வேறு மாவட்டங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.