"நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்" – முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

 
ttn

நவம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா  என்ற பெருந்தொழில் காலம் முடிவுக்கு வந்து மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றன . குறிப்பாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளில் 1 முதல் 8  வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. பள்ளிகளை நோக்கி துள்ளி வரும் பிள்ளைகள் அனைவரையும் வருக வருக என்று நான் வரவேற்கிறேன்.

school reopen

இருண்ட கொரோனா  காலம் முடிந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மாணவ,  மாணவியர் அனைவரும் தொடங்க இருக்கிறீர்கள்.  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் ;இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று நம்பிக்கையுடன் கல்வி சாலைகள் உங்களை நீங்கள் ஒப்படைத்து கொள்ளுங்கள். 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேலாக நடை பெற இயலாத நிலை இருந்தது . ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகாலம் அந்த வகுப்பை சேர்ந்த பிள்ளைகள் பள்ளிக்கு வர இயலாத சூழல் இருந்தது . தொற்றுக்கு  முற்றுப்புள்ளி வைத்து கல்வி சாலைகளின் கதவுகள் திறந்து உள்ளது தமிழக அரசு.  இந்த உன்னதமான சேவைக்கும்,  உழைப்புக்கும் காரணமான அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

cm stalin

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு ஆர்வத்துடன் வரும் குழந்தைகளுக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும்,  நம்பிக்கையூட்டும் வகையிலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்பது,  நம் அனைவரின் கடமையாகும். கல்வி சாலைகளின் கதவுகளை நோக்கி வரும் மாணவச் செல்வங்களை வரவேற்க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களையும் ,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களையும் ,பெற்றோர் ,ஆசிரியர் கழக நிர்வாகிகளையும் ,தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர் பெருமக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.  வாசலுக்கு வந்து வரவேற்பது போல வரவேற்பு கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். 

ஏற்கனவே அவர்களுக்கு அறிமுகமான பள்ளியாக இருந்தாலும் ஒரு பெரும் நெருக்கடிக்கு பிறகு அந்த பிள்ளைகள் வருகிறார்கள்.  முற்றுப்புள்ளி வைத்தாலும் குறித்த பயம் மக்கள் மனதில் இருக்கிறது . அதுவும் பள்ளி குழந்தைகள் மத்தியில் அதிகம் இருக்கிறது.  ஒரு விதமான பரிதவிப்புடன் வரும் பிள்ளைகளின் பயம் போக்கி அரவணைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வரவேற்பினை கொடுங்கள்; இனிப்புகளை வழங்குங்கள்; மலர்கொத்துகளையும் வழங்கினாலும்,  அத்தோடு அன்பையும் ,அரவணைப்பையும், நம்பிக்கையும் சேர்த்து வழங்குங்கள்.

mk stalin

முதல் இரு வாரங்களுக்கு மாணவர்களுக்கு உற்சாகமும் ,நம்பிக்கையும் மூடும் வகையிலான கதை, பாடல் ,விளையாட்டு ,வண்ணம் தீட்டுதல் , நினைவாற்றல் திறன்,  விளையாட்டு உத்திகள் போன்றவற்றை வகுப்பறைகளில் வழங்குங்கள் என்று ஆசிரியர்களை கேட்டுக்கொள்கிறேன். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பள்ளி சார்ந்த கட்சியின் குழந்தைகள் ஈடுபட இயலாத காரணத்தால் அந்த வகுப்புக்குரிய திறன்களை முழுமையாக அடைய முடியாத நிலை இருக்க வாய்ப்புள்ளது.  இதனை ஈடு செய்யும் விதமாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.  அதற்கான  புத்தாக்க பயிற்சியை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய அன்பான வேண்டுகோளை ஏற்று மாணவ செல்வங்கள் பள்ளிக்கு வரும் நாள் இனிய நாளாக மாற்றங்கள்.  பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நேசமுடன் கண்போல போற்றுங்கள்;  மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதன் மூலம் ஆகவே மாணவ செல்வங்களை மீண்டும் உற்சாகப்படுத்தும்.   மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் . அதன் மூலமாக எதிர்கால மனித ஆற்றலை உருவாக்குவோம்.  இதன் மூலமாக மாணவ செல்வங்களை உற்சாகப்படுத்துவது மட்டுமல்ல,  நமக்கும் நமது பள்ளி கால உற்சாகத்தை தரலாம்.  வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து நம் குழந்தைகளை கொண்டாடுவோம் " என்று குறிப்பிட்டுள்ளார்.