"அண்ணாமலை வெறும் பொம்மைதான்" - செல்லூர் ராஜூ ஆவேசம்!!

 
tn

பாஜக மாநில தலைமை கட்டுக்கோப்பு இல்லாமல் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Annamalai

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.  சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என நிர்வாகிகள் பனிப்போர்  நிலவி வருகிறது.  இந்த சூழலில் அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என அண்ணாமலையின் கருத்து அதிமுகவிற்கு அதிர்ச்சியை கொடுக்கக் கூடியதாக மாறி உள்ளது.  ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியுள்ளது. தற்போது அதிமுகவுடன் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் தொடர்ந்து அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

annamalai sellur raju

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு , தமிழக பாஜகவினர் பொம்மைகள்.  அதிமுக கட்டுக்கோப்பான இயக்கம். ஆனால் தமிழக பாஜக கட்டுப்பாடற்ற இயக்கமாக உள்ளது. அண்ணாமலை வெறும் பொம்மைதான். அதனை ராஜாவாகவும் வைக்கலாம்;  கோமாளியாகவும் வைக்கலாம். அகில இந்திய அளவில் தான் அது சரியாக செயல்படுகிறது. ஆண்டவனே பழித்தாலும் அம்மாவை விமர்சித்தவர்களை நாங்கள் சும்மா விடமாட்டோம்.ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியவர்களை சும்மா விடமாட்டோம். அண்ணாமலையின் பேச்சு குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம் என்றார்.