மத்திய அரசின் கருப்பு சட்டத்தை உறுதியாக எதிர்ப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

 
Stalin Stalin


மத்திய அரசின் கருப்பு சட்டத்தை உறுதியாக எதிர்ப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ,  முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது.  இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 5 நூல்களை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ நேற்று நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர்.  இதற்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள்.  

parliament

அப்போதெல்லாம் இந்த சட்டங்களை திராவிர முன்னேற்றக் கழகம் எப்படி கடுமையாக எதிர்த்ததோ, அதேபோல இந்த கருப்பு சட்டத்தையும் எதிர்ப்போம். இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள். மக்கள் பிரச்சனையை திசை திருப்ப செய்கிறார்கள்.  மக்களுடைய கவனத்தை திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக அதை செய்கிறார்கள்: என்று தெரிவித்துள்ளார்.