"தமிழக மக்களுக்கு துயர்தரும் திமுக ஆட்சியை துடைத்து எரிவோம்" - பாஜக

 
bjp

கவர்னர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சில் திமுகவின் பங்கு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிடம்-ஆரியம் குறித்த திமுகவின் பொய்களை தோல்உரிக்க துவங்கிவிட்டார் ஆளுநர்.கிடைத்த சுதந்திரத்தால் இந்தியா குண்டூசி கூட தயாரிக்க முடியாது எனக்கூறி சுதந்திரத்தினத்தை கருப்பு நாளாக அறிவித்தவர்களை திமுக கொண்டாடிவருவதையும், உண்மையாக சுதந்திரத்திற்குப்போராடி இன்னுயிர் நீத்த சுதந்திரப்போராட்ட வீரர்களை ஒப்புக்கு தூக்கிநிறுத்தும் உண்மையையும் வெட்டவெளிச்சமாக்கி விட்டார் கவர்னர்.

tn

13 குற்றவழக்கில் ஈடுபட்ட நான்குமுறை பெட்ரோல் குண்டு வீசிய சமூகவிரோதியை சுதந்திரமாக நடமாடவிட்டிருப்பது, கவர்னர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சில் திமுகவின் பங்கு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.இந்த மிரட்டலுக்கெல்லாம் கவர்னர் ரவியும் அஞ்சமாட்டார்.பாஜகவும் அஞ்சாது.

MKstalin rn ravi

தமிழக மக்களுக்கு துயர்தரும் ஆட்சியை துடைத்து எரிவதே எங்கள்வேலை.துடைத்து எரியும் வரை எங்கள் போராட்டம் ஓயாது" என்று குறிப்பிட்டுள்ளார்.