அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம்..

 
rain


 தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.  

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்  என்றும்,  நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 11  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அத்துடன் இன்று முதல் வருகிற 8ம் தேதி வரை மழை தொடரும் என்றும் தெரிவித்திருந்தது.  

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் - இந்திய வானிலை மையம்..

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மழை  பெய்யக்கூடும்..