விசிக அலுவலகத்தில் அரங்கேறிய காதல் திருமணம்! பெண்ணின் தாய் தற்கொலை

 
Marriage

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சின்ன அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை - உஷா தம்பதியினரின் மகள் ஸ்வேதா. இவர் ஆரணி அருகே உள்ள மோட்டுகுடிசை என்ற கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகின்றார். ஸ்வேதா நர்சிங் பயிற்சிக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் பயிற்சியின் போது ஆரணி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் இரும்பேடு கிராமத்தை சேர்ந்த செக்யூரிட்டி மாதவன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த 10 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

Marriage
 
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற ஸ்வேதா, மாலை கல்லூரி முடிந்தும் வீடு திரும்பவில்லை. இதன் பின்னர் ஸ்வேதா- மாதவன் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினார்கள் என்பது தெரியவந்தது. பின்னர் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அலுவலகத்தில் ஸ்வேதா- மாதவன் ஆகியோருக்கு காதல் திருமணம் நடந்தேறியது. இதுதொடர்பான வீடியோ சமூக வளைதலங்களில் வைரலானது.

இதனிடையே தங்களது பெண் ஸ்வேதா காணமல் போனதாக பெண்ணின் பெற்றோர் கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது தெரிய வந்தது. இதனையொடுத்து இன்று காலையில் ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் போலீசார் விசாரணைக்கு வரும்படி காதல் ஜோடிக்கு சம்மன் அனுப்பியதையொடுத்து, டி.எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி வருகை புரிந்தனர். மேலும் இந்த காதல் ஜோடிக்கு துணையாக 30க்கும் மேற்பட்ட விடுதலைசிறுத்தை கட்சியினர் டி.எஸ்.பி அலுவலகத்திற்குவந்ததால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பின்னர் இச்சம்பவம் குறித்து ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் விசாரணை மேற்கொண்டார்.  அப்போது நர்சிங் மாணவி தன்னுடைய கணவருடன் செல்வதாக கூறியதை கண்ட பெண்ணின் தாயார் உஷா, கையில் வைத்திருந்த சானிடைசரை குடித்து தற்கொலை முயற்சி செய்தார். இதையடுத்து உஷாவை மீட்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.