காரைக்காலில் களைகட்டிய படகு போட்டி

 
af af

காரைக்காலில் கார்னிவல் திருவிழாவை முன்னிட்டு, மீன்வளத்துறை சார்பாக கட்டுமர படகு போட்டி நடைபெற்றது.

காரைக்காலில் மாவட்ட நிர்வாகம் சார்பாக கார்னிவல் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கிடையே கட்டுமர படகு போட்டி நடைபெற்றது. இன்று 
மாலை அரசலாறு பாலம் சிங்காரவேலர் அருகில், புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் போட்டியினை தொடங்கி வைத்தார். இதில் காரைக்காலில் உள்ள  மீனவ கிராமங்களில் 11 மீனவ கிராமங்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மீனவர் கிராமத்திற்கும் ஒரு படகு உட்பட 11 கட்டுமர படகுகளில் கலந்து கொண்ட மீனவர்கள், ஒவ்வொரு படகிலும் மூன்று பேர் அமர்த்தப்பட்டனர். ஒரு தண்டிகை மற்றும் இரு துலாவு மட்டும் அனுமதிக்கப்பட்ட போட்டியில் அரசலாற்று பாலத்தில் அமைந்துள்ள மதகடியில் போட்டி ஆரம்பிக்கப்பட்டு முகத்தோரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள படகு குழாமம் சென்று அடையும் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை போட்டி நடைபெற்றது. 

போட்டி ஆரம்பித்தது முதல் பார்வையாளர்கள் கரையோரம் நின்று வழிநெடுக்க  போட்டியாளர்களை  ஆரவாரத்துடன் உற்சாக படுத்தி சென்றனர். மீனவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கடலில் சீறி பாய்ந்து கட்டு மரத்தை வேகப்படுத்தினர். போட்டியில் கடுமையாக மீனவர்கள் போட்டி போட்டு கட்டுமரத்தை இயக்கி சென்றனர். இதில் முதல் இடத்தை காளிகுப்பம் மீனவ கிராமமும், இரண்டாவது இடத்தை மண்டபத்தூர்  மீனவ கிராமமும்,  மூன்றாவது இடத்தை அக்கம் பேட்டை மீனவர்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மீனவர்களுக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கார்னிவல் திருவிழாவின் இறுதி நாளில் பரிசுகள் வழங்கப்படும். இந்த படகு போட்டியை  மீனவர்கள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலா வாசிகள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மிக விமர்சையாக கரையோரங்களில் வழி நெடுக ஓடிவந்து ஆரவாரத்துடன் கண்டுகளித்தார்கள்.