10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்போது? முக்கிய அறிவிப்பு இதோ!

 
school

10ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை  அரசு தேர்வுத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

school

தமிழகத்தில் கொரோனா  காரணமாக 2020 -21   கல்வி ஆண்டில் 10 ,11, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் மாணவர்கள் தற்காலிக சான்றிதழை இணையம் மூலம் பெற்று மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை  பொருத்தவரை தற்காலிக சான்றிதழ் மூலம் நடைபெற்றுள்ளது.

students

இந்நிலையில் 2020-21 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அக்டோபர் 4ம் தேதி முதல், தங்களது அசல் சான்றிதழ்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில்நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று  அரசு தேர்வுத் துறைகள் அறிவித்துள்ளது.