குடியரசு தினம் ஏன் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

 
1 1

1947-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று இந்தியா இறுதியாக பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது. ஆனாலும் இந்த சுதந்திரம் இந்தியாவிற்கு ஒரு குடியரசு அந்தஸ்தை வழங்கவில்லை. 200 வருஷமாக போராடி சுதந்திரத்தை பெற்றாலும், குடியரசு உரிமை பெறப்படவில்லை.

ஜனவரி 26-ஆம் தேதி தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அதனால் தான் ஜனவரி 26-ஆம் தேதியை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். ஒரு சுதந்திர நாடாக செயல்பட, நமக்கென்று ஒரு அரசியலமைப்பு தேவைப்பட்டது. இந்த அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகுதான் இந்தியா ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெற்றது. இருந்தாலும் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்தது பூர்ண ஸ்வராஜ்.

1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர ஜனவரி 26 ஆம் தேதி விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

12 ஆம் தேதி டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் தேதி அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக ஜனவரி  24 ஆம் தேதி 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950 ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26 ஆம் தேதியை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

டெல்லியில் குடியரசு தின விழா
* டெல்லியில் இந்தியப் பிரதமர் மோடி, மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார். 

* தலைநகர் டெல்லியில் இன்று குடியரசு தினத்தில் அணிவகுப்பு நடைபெறும்.

* கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும்.